வற் வரியால் நெருக்கடி; எரிபொருட்களுக்கு இன்று முதல் தட்டுப்பாடு

petrol வற் வரியால் நெருக்கடி; எரிபொருட்களுக்கு இன்று முதல் தட்டுப்பாடுநாட்டில் எரிபொருட்களுக்கு இன்று சனிக்கிழமை முதல் தட்டுப்பாடு ஏற்படலாம் என்று எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்ட வற் வரி காரணமாக இந்த நிலைமை ஏற்படும் ஆபத்து உள்ளது என்று அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் கபில நாவுதுன்னதெரிவித்துள்ளார்.

எரிபொருள் நிரப்பு நிலையங்களின் வற் தவணைகள் இன்று சனிக்கிழமை முதல் செலுத்தப்பட வேண்டும். இந்த வரியால் எரிபொருள் நிலையங்கள் கடும் நெருக்கடி நிலைக்கு உள்ளாகியுள்ளன. எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி என்பது உரிமையாளருக்கு கிடைக்கக்கூடிய சிறிய தொகையில் செலுத்தவேண்டிய வற் வரியாகும். அதற்குரிய வற் தவணைகள் இன்று முதல் செலுத்தப்பட வேண்டும்.

அவ்வாறு செலுத்தப்படாது விட்டால் எரிபொருள் நிலையங்களால் தொடர்ந்து இயங்க முடியாது போய்விடும். கடந்த 3 மாதங்களாக இந்த பிரச்னையை தீர்க்க கோரிக்கை விடுத்தோம். எனினும், கலந்துரையாடல் மேற்கொள்வதற்கேனும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 20ஆம் திகதிக்கு பின்னர் எரிபொருள் நிலையங்களில் கடும் நெருக்கடியை சந்திக்கும்.

இந்த வற் வரியால் சிறிய நிரப்பு நிலையங்கள்கூட 10 இலட்சம் ரூபாய்க்கு அதிகமாக வரி செலுத்த நேரிடும் என்றும் அவர் கூறினார்.