வரும் 20ம் திகதி ஆட்சி மாற்றம் நடப்பதற்கு உடன்பட்டார் டிரம்ப்

அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் ஜோ பைடனின் தேர்தல் வெற்றி, அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.

அதில், “தேர்தல் முடிவுகளுடன் நான் உடன்படாதபோதும், ஜனவரி 20ஆம் திகதி முறைப்படி ஆட்சி மாற்ற நடவடிக்கை இருக்கும். நான் எப்போதும் தெரிவித்து வந்ததை போல், சட்டப்பூர்வ வாக்குகள் எண்ணப்படும் வரை நாங்கள் தொடர்ந்து போராடுவோம்.

மிகச்சிறந்த முதலாவது பதவிக்காலத்தின் முடிவை இந்த நடவடிக்கைகள் பிரதிபலிக்கும் வேளையில், அமெரிக்காவை மிகச்சிறந்ததாக மீண்டும் ஆக்குவதற்கான எங்களுடைய போராட்டம் தொடரும்,” என்று   தெரிவித்துள்ளார்.