வரலாற்றை நினைவுகூர்வதே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் – பிரித்தானியா

முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டவர்களை நினைவுகூரும் முகமாக யாழ் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுச் சின்னத்தை அழித்தது தனக்கு ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியிருப்பதாக பிரித்தானியாவின் வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலக அமைச்சர் அஹமட் தெரிவித்துள்ளார்.

படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவுகூர்வதன் மூலமே பாதிக்கப்பட்டவர்களின் காயங்களை ஆற்றுப்படுத்துவதுடன், இனநல்லணக்கப்பாடுகளையும் ஏற்படுத முடியும் என அவர் தனது ருவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.