நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுல்

இலங்கை முழுவதிலும் உடனடியாக அமுலுக்கு வருகையில் ஊரடங்குச்சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது நாளை அதிகாலை 04 மணிவரை அமுலில் இருக்கும் என்று காவல்த்துறை தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது. ஆங்காங்கே இடம்பெற்றுள்ள வன்முறைச்சம்பவங்களை அடுத்து இந்த ஊரடங்குச்சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பொதுச் சொத்துக்களுக்கோ அல்லது பொது சமாதானத்திற்கோ குந்தகம் ஏற்படும் வகையில் யாராவது தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள ஊடரங்குச் சட்டத்திற்கு மத்தியில் செயற்பட்டால் அதிகபட்ச அதிகாரத்தை பன்படுத்த நேரிடும் என்று இலங்கை இராணுவத் தளபதி ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.