வடமாகாண நகர அபிவிருத்தி அதிகார சபையானது, நடுத்தர வருமானமுடைய நகரப் பிரதேசங்களில் வசிக்கும் வீடற்ற குடும்பத்தவர்களுக்கு வீடுகளினை வழங்குவதற்காக “நடுத்தர வருமான வீட்டு வசதித் திட்டம்” ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது.
அது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவித்தலில்,
இந்த திட்டம் தொடர்பாக ஆர்வம் உள்ளவர்கள்,விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பப்படிவங்களை பிரதேச செயலகம் யாழ்ப்பாணம்,கரைச்சி மற்றும் வவுனியாவில் பெற்றுக்கொள்ள முடியும். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை 2020,மார்கழி,31ம் திகதி அன்றோ அல்லது அதற்கு முன்னதாகவோ நகர அபிவிருத்தி அதிகார சபை, வடமாகாண காரியாலையம் இல-134, புகையிரத வீதி யாழ்ப்பாணம் என்ற முகவரிக்கு கிடைக்கக்கூடியதாக அனுப்பி வைக்க வேண்டும்.