கடந்த செவ்வாய்க்கிழமை ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகை யில், நான் தமிழ் மக்களுக்கு விரோதமான கருத்துக்களை பாராளுமன்றில் கூறவில்லை. வடக்கு – கிழக்கை இணைக்க இந்த அரசாங்கத்தால் முயற்சிகள் மேற்கொள்ளப்படுமானால் அதை நாம் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை. வடக்கு வடக்காகவும், கிழக்கு கிழக்காகவும் இருக்கவேண்டும். ஆனால் இரு சமூகமும் ஒன்றுபட்டு வாழ்வோம். இருமாகாணங்களையும் இணைக்க அரசு முயன்றால் கிழக்கில் இரத்த ஆறு ஓடும் என்று பேசினேன். தமிழ் மக்களுக்கு விரோதமான எந்த கருத்தையும் நான் பாராளுமன்றில் கூறவில்லை.
பொதுபலசேனா அமைப்பினர் முஸ்லிம் மக்களையும் பள்ளிவாசல்களையும் தாக்க முற்படும்போது அதனை அரசு தடுத்து நிறுத்தவேண்டும். நிறுத்தாமல் இனரீதியான முரண்பாடுகளை தோற்றுவிக்க முனைந்தால் முஸ்லிம் இளைஞர்களும் ஆயுதம் ஏந்துவார்கள். அந்த சூழ்நிலைக்கு இடமளிக்கக்கூடாது என கூறியிருந்தேன். இது ஒரு பௌத்த நாடு. எனவேதான் இத்தகைய இனவாதத்துக்கு இடமளித்தால் முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் தூக்குவார்கள் என்று கூறியிருந்தேன். மாறாக எதனையும் கூறவில்லை.