சட்டத்திற்கு அனைவரும் கட்டுப்பட்டேயாகவேண்டும் – சிறிலங்கா சபாநாயகர்

நாட்டில் எவரும் எந்த இனத்தை, மதத்தை அல்லது கலாசாரத்தை சேர்ந்தவராயினும் அனைவரும் பொது சட்டத்திற்கு கட்டுப்பட வேண்டும் என்றும் எவரும் சட்டத்தை மீறமுடியாது எனவும் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.

பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடும் சிறுகுழு காரணமாக அனைத்து முஸ்லிம் மக்களையும் தவறான கண்ணோட்டத்தில் பார்க்க முடியாது என்றும் பெரும்பாலான முஸ்லிம்கள் அடிப்படை வாதத்திற்கு முரணானவர்கள் என்றும் சபாநாயகர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் அடிப்படை வாதிகளின் தேவைக்காக நடத்தப்படும் கல்வி நிறுவனங்கள், பெரும்பாலான முஸ்லிம் மக்கள் நிராகரிக்கும் சிறுவர் உரிமையை மீறும் வகையிலான திருமண நடைமுறைகள் போன்றவை தொடர்பில் சட்டங்களை கொண்டுவர பாராளுமன்றம் விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் சபாநாயகர் தெரிவித்தார்.