லண்டனில் இருந்து தாயகத்துக்கு திரும்பியவர்கள் கண்காணிப்பில்

இலங்கைக்கு வர முடியாத நிலையில் இங்கிலாந்தில் தங்கியிருந்த 148 பேர், நேற்று மதியம் நாடு திரும்பியுள்ளனர்.

இலங்கைக்குச் சொந்தமான யு – எல் – 504 எனும் விமானம் மூலம் லண்டன் நகரில் இருந்து இந்தப் பயணிகள் நாடு திரும்பியுள்ளனர்.

இதனையடுத்து, இந்த நபர்கள் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் ஸ்தாபிக்கப்பட்டுள்ள 16 கண்காணிப்பு நிலையங்களுக்கு இவர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்படுகின்றது.