ராஜபக்சர்களின் கோரிக்கைகளை நிராகரித்த ரணில் – தோல்வியில் முடிந்த முதலாவது சுற்று பேச்சு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்களான மஹிந்த ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு தோல்வியில் முடிவடைந்துள்ளதாக ஆளுங்கட்சியின் வட்டாரங்களில் அறிய முடிகிறது.

இந்தச் சந்திப்பில் அடுத்த தேர்தலுக்கான கூட்டணித் தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளதுடன், பேச்சுகளில் இணக்கப்பாடுகள் எட்டப்படாமையால் சந்திப்பு தோல்வியில் முடிந்துள்ளது.

ரணில், மஹிந்த, பசில் சந்திப்பில் அடுத்த தேர்தலுக்கான கூட்டணி தொடர்பில் ஆழமாக ஆராயப்பட்டுள்ளது. என்றாலும், ராஜபக்சர்களின் கோரிக்கைகளை ரணில் முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை என தெரிய வருகிறது.

இதனால் இணக்கப்பாடு இன்றி நேற்றிரவு நடைபெற்ற சந்திப்பு நிறைவடைந்துள்ளதுடன், புத்தாண்டுக்கு முன்னர் மீண்டும் கூடி பேச்சுகளை நடத்தி கூட்டணி அமைப்பது தொடர்பான நடவடிக்கைகளை இறுதிப்படுத்த மூவரும் முயற்சிக்களாம் எனவும் அறிய முடிகிறது