ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 10 பேரை கைது செய்யுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

2016 ஆம் ஆண்டு மார்ச் 29 மற்றும் 31 திகதிகளில் இடம்பெற்ற மத்திய வங்கியின் பிணைமுறி ஏலத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் முறைக்கேடுகள் தொடர்பில் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 10 பேரை கைது செய்யுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

குற்றம் சுமத்தப்பட்டுள்ள 12 பேருக்கும் எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் போதுமானதாக காணப்படுவதால் நீதிமன்ற பிடியாணையை பெற்று அவர்களை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் பதில் பொலிஸ்மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியிருந்தார்.

அதற்கமைய கடந்த 4 ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் சந்தேக நபர்கள் குறித்த விடயங்களை முன்வைத்தனர்.

அந்த விடயங்கள் பரிசீலித்த கோட்டை நீதவான் நீதிமன்ற நீதிபதி ரங்க திசாநாயக்க சந்தேகநபர்களை கைது செய்வதற்கான பிடியாணையை பிறப்பித்துள்ளார்.

அதேபோல் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 12 பேருக்கு வெளிநாடு செல்லவும் கோட்டை நீதவான் நீதிமன்றம் தடைவிதித்துள்ளமை குறிப்பிடதக்கது.