ரணிலின் பதவி மோகம் முடிவுக்கு வந்தது – ஐ.தே.க தலைவராகிறார் சஜித்

அண்மையில் நடந்த சிறீலங்கா அரச தலைவர் தேர்தலில் தென்னிலங்கையின் பிரதான அரசியல் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி படுதோல்வியடைந்த பின்னர் அதன் தலைமைப் பொறுப்பில் இருந்து முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா விலக வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைக்கப்பட்ட போதும், ரணில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்ததால் கட்சியில் பெரும் குழப்பம் ஏற்பட்டு வந்தது.

ஆனால் தற்போது அவர் பதவி விலகச் சம்மதித்துள்ளதாக ஐ.தே.க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பில் கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று அல்லது நாளை இடம்பெறவுள்ளது. இந்த கூட்டத்தில் சஜித் பிரேமதாசா தலைவராக தேர்ந்தெடுக்கப்படவுள்ளதுடன், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தொட-ர்பிலும் முடிவுகள் எடுக்கப்படும் என அவை மேலும் தெரிவித்துள்ளன.