யாழ்.மாவட்ட அரச அதிபராக கணபதிப்பிள்ளை மகேசன் பதவியேற்றார்

யாழ். மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக கணபதிப்பிள்ளை மகேசன் இன்று பதவியேற்று, கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இவர் யாழ். அரச அதிபராக நியமிக்கப்பட முன்னர் மட்டக்களப்பு வாழைச்சேனை, வவுணதீவு மற்றும் செங்கலடி ஆகிய பிரதேச சபைகளின் சிறப்பு ஆணையாளராகப் பதவி வகித்துள்ளார்.

மேலும் உணவு ஊக்குவிப்பு வாரியத்தின் உறுப்பினராகவும், கென்யாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராகவும் பதவி வகித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை யாழ். மாவட்ட அரச அதிபராக பதவி வகித்த நாகலிங்கம் வேதநாயகன், பதவி விலகியதை அடுத்தே கணபதிப்பிள்ளை மகேசன் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டிருக்கின்றார்.

நாகலிங்கம் வேதநாயகன் பதவிக்காலம் முடிவடைவதற்கு 3 மாதங்கள் இருக்கையில், அவரை வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டதால் அவர் தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.