யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் விபரங்களை சேகரித்த பொலிசார்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வின் 2ஆம் நாள் நிகழ்வுகள்  யாழ். பல்கலைக்கழக முன்றலில் பல்கலைக்கழக மாணவர்களினால் இன்று(14) இரவு 7மணியளவில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

நிகழ்வில் உயிர்நீத்த உறவுகளை நினைவுகூர்ந்து சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்வு நடைபெறும் இடத்திற்கு வந்த யாழ். பொலிசார் நினைவு நிகழ்வில் கலந்து கொண்ட பல்கலைக்கழக மாணவர்களின் பெயர் விபரங்களை பெற்றுக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.