சி.ஐ.டி.யினர் அச்சுறுத்தி கையயாப்பம் பெற முயன்றனர்; முஸ்லிம் மாணவர்கள் மனு

தங்களை அச்சுறுத்தி, சி.ஐ.டியினர் போலி ஆவணங்களில் கையயாப்பங்களை பெற முயன்றனர் என்று, மூன்று முஸ்லிம் மாணவர்கள் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைமீறல் மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

இஸ்லாமிய மதபாடசாலையில் ஆயுதப்பயிற்சி வழங்கப்பட்டதாக தெரிவித்து, அதனைத் தங்களுடன் தொடர்புபடுத்த குற்றவியல் விசாரணைப் பிரிவினர் முயன்றார்கள் என்றும், மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

மூன்று மாணவர்களின் சார்பிலும் அவர்களின பெற்றோர்கள் இந்த மனுவில் கைச்சாத்திட்டுள்ளனர். சட்டத்தரணி பிரபுதிகா திசேர பெற்றோர்களின் சார்பில் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

குற்றவியல் விசாரணைப்பிரிவினர் என தங்களைக் குறிப்பிட்டவர்களே இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டனர் என மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது