யாழ். இராணுவ கட்டளைத் தளபதியை தொடர்பு கொண்ட மனோ

யாழில் அதிகமாக உள்ள சோதனைச் சாவடிகள் தொடர்பாக பேசுவதற்கு, அமைச்சர் மனோ கணேசன் யாழ். கட்டளைத் தளபதியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

யாழிலிருந்து வெளியிடங்களுக்கு செல்பவர்கள் அதிக சோதனை கெடுபிடிகளை சந்திப்பதைப் பற்றி குறிப்பிட்ட மனோ கணேசன், அது குறித்து கேள்வியெழுப்பினார்.

வடக்கில் ஐ.எஸ் தாக்குதல் அபாயம் ஏற்படாதிருக்க அவதானமாக இருப்பதாக குறிப்பிட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி, தற்போதைய நிலைமை சுமுகமாகி வருவதால் சோதனை நடவடிக்கைகளை தளர்த்துவதாகக் குறிப்பிட்டுள்ளதாக மனோ கணேசன் தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.