யாழ்ப்பாண மக்களுக்கு சுகாதார அமைச்சரின் அறிவுறுத்தல்

யாழ்ப்பாண மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும் என்றும் சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

யாழில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் யாழ். மக்களை அவதானமாக இருக்குமாறு அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து கருத்துத் தெரிவித்த அவர், “கொரோனா தொற்றிற்கு இலக்கான சுவிஸ் மத போதகரைச் சந்தித்தவர்களே தொடர்ந்தும் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். ஆகவே இந்த வைரஸின் தீவிரத் தன்மையை யாழ். மக்கள் உணர்ந்த ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.

ஊரடங்குச் சட்டம் தொடர்ந்து அமுலில் இருப்பதால் தான் யாழில் கொரோனா தொற்று பாதிப்பு குறைவாக உள்ளது. ஆகவே ஊரடங்குச் சட்ட வேளையில் மக்கள் வீடுகளுக்குள் இருப்பதே பாதுகாப்பானது என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.