இந்தியாவிலிருந்து இலங்கைக்கு 2000 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் கடத்தல்

இலங்கையில் தமழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் வடக்குப் பகுதியில் போதைப் பொருள் விற்பனை அதிகம் என்றும், இந்தியாவிலிருந்து கடல் வழியாக இலங்கையின் வடக்கு மாகாணத்திற்கு கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக குற்றஞ் சாட்டப்படுகின்றது. ஆனால், தற்போது இலங்கை வரலாற்றிலேயே முதன்முறையாக கடல்வழியாக இலங்கைக்கு கப்பலில் கடத்தப்பட்ட 2ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப் பொருட்களை சிறிலங்கா கடற்படையினர் தற்போது பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 9பேரை கைது செய்து சிறிலங்கா கடற்படை விசாரணை நடத்தி வருகின்றது. இலங்கை வரலாற்றில் அதிக போதைப் பொருள் பிடிபட்டதானது, பொது மக்கள் மற்றும் காவல்துறை மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் விடுதலைப் புலிகளின் இருந்த போது போதைப் பொருள் பாவனை என்பது முற்றாகவே தடை செய்யப்பட்டிருந்ததுடன், மக்களும் அதனை புறக்கணித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.