யாழ்ப்பாணம் – புதுச்சேரி இடையே கப்பல் போக்குவரத்து

யாழ்ப்பாணம் – புதுச்சேரிக்கு இடையிலான கப்பல் போக்குவரத்து விரைவில் தொடங்கப்படவுள்ளதாக மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை வருகை தந்திருந்த மத்திய கப்பல் போக்குவரத்து மற்றும் உரங்கள் இரசாயனத்துறை இணை அமைச்சர் மன்சுக் மாண்டலியாவை கோயில் இணை ஆணையாளர் ந.நடராஜன் தலைமையிலான அதிகாரிகள் வரவேற்றனர்.

கோவில் தரிசனத்தை முடித்துக் கொண்டு பத்திரிகையாளர்களிடம் பேசும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், இந்தியா இலங்கைக்கு இடையே கப்பல் போக்குவரத்து தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. முதல் கட்டமாக புதுச்சேரியிலிருந்து யாழ்ப்பாண நகருக்கான போக்குவரத்து விரைவில் தொடங்கப்படும். அதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகின்றது என்றார்.

Attachments area