யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையம் திறப்பு

சிறீலங்கா அரசினால் இந்திய அரசின் ஆதரவு மற்றும் அழுத்தங்களுக்கு மத்தியில் நிர்மானிக்கப்பட்ட யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையம் இன்று (17) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

சிறீலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறீசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா ஆகியோர் இந்த நிகழ்வில் பங்கு பற்றியிருந்தனர்.

அலையன்ஸ் விமான நிறுவனத்தைச் சேர்ந்த விரி-ஆர்கேஎம் என்ற விமானம் 30 பயணிகளுடன் இன்று விமான ஓடுபாதையில் தரையிறங்கியிருந்தது.

முழுமையான சேவைகள் எதிர்வரும் மாதம் முதல் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகின்றது.