சிறிலங்கா படையினர் அபகரித்த மக்களின் காணிகளில் ஒரு பகுதி நாளை விடுவிப்பு

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் படையினர் அபகரித்த காணிகளில் 150.15 ஏக்கர் நாளை வெள்ளிக்கிழமை விடுக்கப்பட்டுள்ளது.

படையினர் வசமிருந்து விடுவிப்பதற்காக அடையாளம் காணப்பட்ட மக்களின் காணிகளே இவ்வாறு நாளை அரசாங்க அதிபர்களிடம் கையளிக்கப்படவுள்ளன.

நாளை காலை குறித்த காணிகள் படையினரால் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவுள்ளதாகக் கிளிநொச்சி இராணுவ தலைமையகம் தெரிவிக்கின்றது.