யாழ்ப்பாணத்துக்கு தப்பித்து வந்த 7 பேர் தொடர்பில் விபரங்கள்.

கொரோனா இடர் வலயமாக அறிவிக்கப்பட்டுள்ள கொழும்பிலிருந்து பாரவூர்தி மூலம் யாழ்ப்பாணத்துக்கு தப்பித்து வந்த 7 பேர் தொடர்பில் விபரங்கள் கிடைத்துள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்துள்ளார்..

யாழ்ப்பாணத்தில் நேற்றிரவு இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

குறித்த 7 பேர் தொடர்பான விபரங்கள் பாதுகாப்பு தரப்பினரிடம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.