அரசியலமைப்புப் பேரவை இன்றைய தினம் கூடவுள்ளது.

அரசியலமைப்புப் பேரவை முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்றைய தினம் கூடவுள்ளது.

நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.

முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இன்று முற்பகல் 10.30 அளவில் இடம்பெறவுள்ளது.

இந்த கலந்துரையாடலில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச மற்றும் அரசியலமைப்புப் பேரவையின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்கவுள்ளனர்.