யாழில் புரெவி புயல் தாக்கத்தினால் பெருமளவான மக்கள் பாதிப்பு!

புரெவி புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட கடும் மழை மற்றும் காற்றினால் யாழ்ப்பாண மாவட்டத்தில்   பெருமளவிலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரம் சில இடங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது.

1 20 யாழில் புரெவி புயல் தாக்கத்தினால் பெருமளவான மக்கள் பாதிப்பு!

இந்நிலையில், இந்த அனர்த்தம் குறித்து யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் என்.சூரியராஜா தெரிவிக்கையில்,

“யாழ். மாவட்டத்தில் தற்போதுவரை ஒன்பதாயிரத்து 346 குடும்பங்களைச் சேர்ந்த 31 ஆயிரத்து 703 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

2 யாழில் புரெவி புயல் தாக்கத்தினால் பெருமளவான மக்கள் பாதிப்பு!

அத்தோடு, யாழ். மாவட்டத்தில் தற்போது 32 இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டு 879 குடும்பங்களைச் சேர்ந்த மூவாயிரத்து 189 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

6 யாழில் புரெவி புயல் தாக்கத்தினால் பெருமளவான மக்கள் பாதிப்பு!

மேலும், கடும் காற்றினால் 48 வீடுகள் முழுமையாகவும், ஆயிரத்து 826 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளனர்.

5 யாழில் புரெவி புயல் தாக்கத்தினால் பெருமளவான மக்கள் பாதிப்பு!

குறிப்பாக, யாழ். மாவட்டத்தில் பருத்தித்துறை, சண்டிலிப்பாய் மற்றும் நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ளவர்களே அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.” என்றார்.