மோடியைச் சந்திக்க இந்தியா செல்லும் கூட்டமைப்பு

ஜனாதிபதி தேர்தல் களம் சூடுபிடித்துள்ள இந்த நிலையில், தமிழ் மக்களின் தேசிய பிரச்சினைகள் குறித்து இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க புதுடில்லி பயணிக்கவுள்ளதாக அறியப்படுகின்றது.

இந்தக் குழுவிற்கு இரா. சம்பந்தன் தலைமை தாங்குகின்றார். வெகு விரைவில் இவர்கள் இந்திய விஜயத்தை மேற்கொள்ளவுள்ளனர். கூட்டமைப்பினரின் மோடியுடனான பேச்சுவார்த்தை முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகின்றது.

இதேவேளை கடந்த 12ஆம் திகதி இரா.சம்பந்தன் புதுடில்லி சென்றிருந்தார். இது அவரின் மருத்துவ தேவைக்காக சென்றதாக சொல்லப்படுகின்றது.