மோசமடையும் நிலைமைகள் உலகளாவிய ரீதியில் 423,330 பேருக்கு தொற்று 18,906 பேர் சாவு

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 196 நாடுகளில் பரவியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இதற்கிடையே, சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது ஐரோப்பிய நாடுகளில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. குறிப்பாக இத்தாலியை இந்த வைரஸ் புரட்டி எடுத்து வருகிறது.

இத்தாலியில் இதுவரை 69 ஆயிரத்து 176 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. இந்நிலையில், கொரோனாவுக்கு அந்நாட்டில் நேற்று ஒரே நாளில் 743 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் இத்தாலியில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆயிரத்து 820 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

அமெரிக்காவில் 54,916 தொற்றுக்குள்ளாகி உள்ளதுடன் 784 சாவடைந்துள்ளனர்.ஐரோப்பிய நாடுகளிலும் நிலைமை மோசமாகவேயுள்ளது.

இத்தாலிக்கு அடுத்தாக இஸ்பெயினில் 42,058 தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன் 2,991சாவடைந்துள்ளனர்.

ஜெர்மனியில்- 32,991 தொற்று 159 சாவு
பிரான்ஸ் – 22,304 தொற்று 1,100 சாவு
சுவிஸ் – 9,877 தொற்று 132 சாவு
ஐக்கிய இராச்சியம் -8,077 சாவு 422

உலகளாவிய ரீதியில் 423,330 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்,18,906 பேர் சாவடைந்துள்ளனர்.109,146 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.