மைத்திரி வெளிநாடு சென்றதில் சந்தேகம் – ஐக்கிய மக்கள் சக்தி தெரிவிப்பு

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளிநாடு சென்றமை தொடர்பில் சந்தேகம் நிலவுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜெயவர்த்தன தெரிவித்தார்.

இது தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு சென்றபோதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “மைத்திரிபால சிறிசேன நாட்டையும் சாப்பிட்டார். ஆட்களை சாப்பிட்டுவிட்டு இப்போது தாய்லாந்திற்கு சென்று விட்டாரோ என அஞ்சுகிறோம். இது ஒரு தப்பிக்கும் முயற்சியா? என தனிப்பட்ட முறையில் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அவரை உடனடியாக வரவழைத்து சட்டத்தை அமுல்படுத்தவேண்டும்” என்றார்.