மைத்திரியின் கோரிக்கையை நிராகரித்த கனேடிய பிரதமர்

இராஜதந்திர ரீதியிலான விஜயம் ஒன்றை மேற்கொண்டு, சிறிலங்கா வருமாறு கனேடிய அரச தலைவரை சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரியிருந்தார். இதனை கனேடிய அரசாங்கம் நிராகரித்துள்ளது.

பொதுவாக இவ்வாறான அறிவித்தல்கள் வெளிவிவகார அமைச்சகங்கள் மற்றும் தூதுவராலயங்கள் ஊடாகவே மேற்கொள்ளப்படுவது வழமை.

ஜனாதிபதியின் மரண தண்டனை அமுல்ப்படுத்த காட்டிய ஆர்வம், ராஜதந்திர நடவடிக்கைகளில் அனுபவமின்மை போன்ற செயல்களும், ஐரோப்பிய ஒன்றியம் தமக்கு அழுத்தம் கொடுப்பதாக பேசியமையும் இந்த கனேடிய அரசாங்கத்தின் மறுப்பிற்கான காரணமாக கருதப்படுகின்றது.

இதேவேளை மைத்திரிபால சிறிசேனவை கனடா வருமாறும் கனேடிய அரசாங்கம் அழைப்பு விடுக்கவில்லை.