மேல்மாகாணம் முழுவதிலும் நாளை நள்ளிரவு முதல் ஊரடங்கு

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களை உள்ளடக்கிய மேல் மாகாணம் முழுதிலும் நாளை வியாழக்கிழமை நள்ளிரவு 12.00 மணி முதல் ஊடரங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

நவம்பர் 2 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 5.00 மணி வரையில் ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கம்பஹா, கொழும்பு, களுத்துறை மாவட்டங்களில் பல பகுதிகளில் ஊரடங்குச் சட்டம் ஏற்கனவே நடைமுறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.