மேலும் 6 பேருக்கு கொரோனா… மொத்தம் 254

கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மேலும் 6 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைய கொரோனா வைஸ் தொற்றினால் இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 254 ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாறு இனங்காணப்பட்டுள்ளவர்கள் வெலிசர தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தலுக்கு உள்வாங்கப்பட்டிருந்தவர்கள் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.