தேர்தல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்.

பொதுத் தேர்தல் தொடர்பில் இறுதி தீர்மானம் பெறுவதற்கான கலந்துரையாடல் ஒன்று நாளை இடம்பெற உள்ளது.

இதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க ,இராணுவ தளபதி, சுகாதார அமைச்சின் சில அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள் என பலர் கலந்துகொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடல் நாளை பிற்பகல் வேளையில் தேர்தல்கள் ஆணையகத்தில் இடம்பெற உள்ளதாக கூறப்பட்டுள்ளது