முஸ்லீம் பள்ளிவாசல்கள் வர்த்தக நிலையங்கள்மீது தாக்குதல் – காவல் துறையினர் கண்டுகொள்ளவில்லை

அத்துரலிய ரத்ன தேரரின் போராட்டத் திற்கு ஆதரவு தெரிவித்து கெக்கிராவ நகரில் இடம்­பெற்ற ஆர்ப்பாட்ட ஊர்­வ­லத்தின் போது முஸ்லிம் பள்ளி­வாசல் மற்றும் வர்த்தக நிலை­யங்கள் மீது கல்­வீச்சு தாக்­குதல் நடத்தப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இச்­சம்­பவம் நேற்று பகல் இடம்­பெற்­றுள்­ளது. இதன்போது பள்­ளி­வா­சலின் முன்­புற கண்­ணா­டிகள் பல­வற்­றுக்கு சேதம் ஏற்­பட்­டுள்­ளது. முஸ்லிம் வர்­தக நிலை­யங்கள் மீதும் ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டோ­ரினால் கல்­வீச்சு தாக்­குதல் நடாத்­தப்­பட்­டுள்­ள­துடன் முஸ்லிம் மக்­களை அசிங்­கி­ய­மானவார்த்­தை­களை கொண்டும் கோஷங்­க­ளையும் இவர்கள் எழுப்­பி­யுள்­ளனர். இதனால் நகரில் பதற்ற நிலைமை ஏற்­பட்­டது.

பொலிசார் நகரில் கட­மையில் இருந்­துள்ள போதிலும் எந்த வித­மான நட­வ­டிக்­கை­களும் எடுக்­க­வில்லை. தாக்­கு­தலைத் தொடர்ந்து நக­ரி­லி­லுள்ள வர்­தக நிலை­யங்கள் மூடப்­பட்­டுள்­ள­துடன் பொருட்­களை கொள்­வ­னவு செய்­வ­தற்­காக நக­ருக்கு வந்­தி­ருந்த பொது­மக்­களும் பெரும் அச்­ச­நி­லையில் செய்­வ­த­றி­யாது அச்­சத்­துடன் தமது வீடு­க­ளுக்கு திரும்­பி­யுள்­ளனர்.

அதை தொடர்ந்து அதி­க­ள­வி­லான இரா­ணு­வத்­தினர் நகரில் குவிக்­கப்­பட்­டுள்­ள­துடன் பாது­காப்பு பலப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.இருந்­தாலும் முஸ்லிம் மக்கள் பெரும் அச்­சத்­துடன் வாழ வேண்­டிய நிலை ஏற்­பட்­டுள்­ளது.

அநுராதபுரம்நகரிலும் அனைத்து வர்தக நிலையங்களும் மூடப்பட்டிருந்தது. பொலிஸார் பாதுகாப்பு கடமையில் இருந்த வேளையிலேயே ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.