மீனவர்கள் பிரச்சினை இராஜதந்திர ரீதியில் தீர்க்கப்பட வேண்டும் -டக்ளஸ்

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்து மீறி மீன் பிடியில் ஈடுபடுகின்ற இந்திய படகுகளை கைது செய்யுமாறு கடற்படைக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இந்த விவகாரம் இரு நாடுகளுடன் தொடர்பு படுவதால் இராஜதந்திர ரீதியிலேயே தீர்வு காணப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் இந்திய அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட சில ஆலோசனைகள் தொடர்பாகவே தான் இந்த கருத்தை தெரிவிப்பதாகவும், ஆனால் அந்த கருத்துக்கள் திரிவுபடுத்தப்பட்டுள்ளன என்றும் அவர் குற்றம்சுமத்தியுள்ளார்.

இந்தியாவின் ஆலோசனைகள் தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை. கடற்றொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்பட மாட்டாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.