இலங்கை – அமெரிக்காவிற்கிடையிலான மிலேனியம் ஒப்பந்தத்தை எதிர்த்து தான் அறிக்கை விட்டதாக வெளிவந்த செய்திகளில் உண்மை இல்லை என்றும், தான் எந்தவித அறிக்கையையும் விடவில்லை என்றும் கத்தோலிக்க திருச்சபையின் பேராயர் கர்தினால் மல்க்கம் ரஞ்சித் அவர்களின் செயலகம் அறிக்கையொன்றை விடுத்துள்ளது.
இது பற்றிக் கருத்துக் கூறிய நிதியமைச்சர், கோத்தபயா ராஜபக்ஸ தரப்பே, கர்தினால் மல்க்கம் ரஞ்சித் பெயரில் போலியான இந்த அறிக்கையை வெளியிட்டு அரசியல் லாபம் தேட முனைவதாகக் குறிப்பிட்டுள்ளார்.