மாத இறுதியில் புதிய கட்சிகள் பதியப்படும்; விக்கியின் கட்சியையும் பதிய ஏற்பாடு

புதிய அரசியல் கட்சிகளைப் பதிவு செய்யும் நடவடிக்கை இந்த மாத இறுதியில் இடம்பெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியையும் பதிவு செய்வதற்கான முயற்சிகளை அவர்கள் முன்னெடுத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதற்காக பல்வேறு தரப்பினர் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர் என ஆணைக்குழு கூறியுள்ளது. தற்போது 70 அரசியல் கட்சிகள் தேர்தல்கள் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, அரசியல் கட்சிகள் சில, இதுவரை தமது கணக்கு அறிக்கைகளை ஒப்படைக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. இதன்காரணமாக, அந்தக் கட்சிகளின் பதிவுகளை இரத்துச்செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.