மாணவர்களை கொடூரமாகக் கொன்ற படையினர் விடுதலை ; தமிழருக்கு சிறிலங்காவில் நீதி கிட்டாது என்பது மீண்டும் நிரூபணம்

திருகோணமலையில் 2006 இல் ஐந்து அப்பாவி மாணவர்களை சுட்டு கொன்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த படையினர் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சாட்சிகள் தொடர்ந்து சமூகமளித்த காரணத்தகால் குறித்த கொலையாளிகளை விடுதலை செய்வதாக நீதிபதி அறிவித்தார்.

திருகோணமலை நகரில் கடற்கரை பிரதேசத்தில் காந்தி சிலை அருகில் 2006.01.02 ஆம் திகதி மாலை 7 மணி அளவில் இடம்பெற்ற கைக்குண்டு தாக்குதல் மற்றும் துப்பாக்கி பிரயோக த்தில் 5 மாணவர்கள் உயிரிழந்ததுடன் 2 மாணவர்கள் காயமடைந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட 12 விஷேட அதிரடிப்படையினரும் 1 பொலிஸ் அதிகாரியும் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த வழக்கு திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது நீதிமன்றத்தில் சாட்சிகள் தொடர்ந்து வருகைதராததன் காரணத்தால் சந்தேக நபர்களை விடுதலை செய்யுமாறு நீதிவான் முகம்மது ஹம்சா உத்தரவிட்டார்.

சாட்சிகளுக்கு தொடர்ந்து கொலைமிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில்
பலர் நாட்டைவிட்டு வெளியேறியமை தொடர்பில் நீதிமன்றம் எந்தவித கரிசனையும் காட்டாமல் இத்தகைய தீர்ப்பை வழங்கியுள்ளமை சிறிலங்காவில் தமிழருக்கு என்றும் நீதி வழங்கப்படாது என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துநிற்கிறது.