மஹிந்த நியமித்த குழுவின் அறிக்கை அமைச்சரவைக்கு வரவில்லை; அதிகரிக்கும் முரண்பாடுகள்

அரசமைப்பின் 20ஆவது திருத்தச்சட்ட வரைவு தொடர்பில் ஆராய்வதற்காக பிரதமரால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை நேற்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவில்லை.

அமைச்சர் சி.பி. ரத்னாயக்க இந்தத் தகவலை வெளியிட்டார்.

பேராசிரியர் ஜீ.எஸ்.பீரிஸ் தலைமையில் நியமிக்கப்பட்ட மேற்படி குழுவின் பரிந்துரை அறிக்கை பிரதமரிடம் நேற்று முன் தினம் கையளிக்கப்பட்டது. நேற்று அமைச்சரவையில் முன்வைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

ஆனாலும் நேற்று அமைச்சரவை கூடியபோதும் ‘20’ தொடர்பான பரிந்துரை அறிக்கை முன்வைக்கப்படவில்லை.

இதேவேளையில் 20 ஆவது திருத்தம் தொடர்பில் அமைச்சரவைக்குள் முரண்பாடுகள் தீவிமடைந்திருக்கும் நிலையில்தான் அது அமைச்சரவைக்கு நேற்றைய தினம் வரவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.