மல்லாகத்தில் ஆசிரியர் மீது நேற்று இரவு வாள்வெட்டு – மோட்டர் சைக்கிளில் வந்து தாக்குதல்

மல்லாகம் பகுதியில் உடற்கல்வி ஆசிரியர் ஒருவர் வாள்வெட்டுத் தாக்குதலுக்கு இலக்காகிப் படுகாயம் அடைந்துள்ளார். நேற்று இரவு 9.00 மணியளவில் மல்லாகம் சந்தியை அண்மித்த பகுதியில் நண்பர்களுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த போது இந்த வன்முறை நிகழ்ந்துள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் கொண்ட குழு அவர் மீது வாள்வெட்டுத் தாக்குதலை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் படுகாயம் அடைந்த அவர் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்களுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.