மருதானை, தெமட்டக்கொடை பகுதிகளில் உடனடியாக ஊடரங்கு; மறு அறிவித்தல் வரை தொடரும்

கொழும்பு மாவட்டத்தில் மருதானை, தெமட்டக்கொடை பகுதிகளில் இன்றிரவு முதல் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. மறு அறிவித்தல் வரை இந்த ஊரடங்கு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கம்பஹா மாவட்டத்திலும், கொழும்பு, களுத்துறை மாவட்டங்களின் பல பகுதிகளிலும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுகின்றது.