மன்னார் குருந்தன் குளப்பகுதியில் கி.பி 13 ஆம் நூற்றாண்டுக்குரிய சைவ ஆலயம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளதாக மன்னார் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆலயத்தில் காணப்படும் பொருட்களின் ஆய்வுகளின் அடிப்படையில் இந்த வயது எல்லை கணிக்கப்பட்டுள்ளது.
ஆனால் தமிழ் மக்களின் தொன்மையான சைவ ஆலயங்கள் காணப்படும் பகுதிகளில் சிங்கள அரசின் தனிச் சிங்கள அதிகாரிகளைக் கொண்ட தொல்லியல் திணக்களம் பௌத்த ஆலயங்களை நிறுவி தமிழர்களின் அடையாளங்களை அழிக்கும் முயற்சிகளை தீவிரமாக மேற்கொண்டுவருவது நாம் அறிந்ததே.
இந்த நிலையில் இந்த ஆலயமும் சிறீலங்கா அரசின் இன அழிப்பில் இருந்து தப்புமா என்ற கேள்வி தமிழ் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.