திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பிரதேச செயலக பகுதிக்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட அரச அதிகாரிகளுக்கான மந்த போசனை தொடர்பான விழிப்புணர்வு தம்பலகாமம் பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்றது.
குறித்த நிகழ்வானது Scalng up Nutrition peoples Forum ன் நிதி பங்களிப்பிலும் சக்தி மகளிர் அமைப்பின் மூலமாக இடம் பெற்றது.
மந்தபோசனே,உணவு பழக்க வழக்கங்கள்,கர்ப்பிணி தாய்மார்களின் ஆரோக்கியமான நிலை உள்ளிட்ட பல விடயங்கள் இதன் போது விழிப்புணர்வூட்டப்பட்டது. குறித்த நிகழ்வுக்கு வளவாளராக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் தாய் சேய் நல மருத்துவ அதிகாரி வைத்தியர் ஏ.எச்.சமீம் கலந்து கொண்டார்.
இதில் தம்பலகாமம் பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஐ.முஜீப்,தம்பலகாமம் சுகாதார வைத்திய அதிகாரி
வைத்தியர் மலர்விழி உட்பட பொது சுகாதார மருத்துவ மாதுக்கள்,பொதுச் சுகாதார பரிசோதகர்கள்,கல்வி அதிகாரிகள்,வெளிக்கள உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.