மசூதிக்கு அடியில் ராமர் கோயில் இருக்கவில்லை;இந்த தீர்ப்பு பொரும்பான்மைவாதத்துக்கு தூபம் போடுகிறது – பேராசிரியர் டி.என். ஜா

பேராசிரியர் டி.என். ஜா பிரபல வரலாற்று ஆய்வாளர். இன்று வழங்கப்பட்ட அயோத்தி தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள “ராம்ஜென்ம பூமி-பாபர் மசூதி: தேசத்திற்கு வரலாற்றாளர்களின் அறிக்கை” என்ற அறிக்கையை எழுதிய வரலாற்று ஆய்வாளர் குழுவில் இடம் பெற்றிருந்தவர்.

போராசிரியர் சூரஜ் பான், அர்தர் அலி, ஆர். எஸ். ஷர்மா மற்றும் டி.என்.ஜா ஆகிய அந்த நான்கு சுயாதீன வரலாற்று ஆய்வாளர்களும் தொல்லியல் சான்றுகளில் தீவிர ஆய்வு நடத்தி, பாபர் மசூதிக்கு அடியில் கட்டப்பட்டிருந்தது இந்து கோயில் அல்ல என்று அரசுக்கு அறிக்கை அளித்தனர்.

அயோத்தி தீர்ப்பு வெளிவந்துள்ள நிலையில், அது பற்றி டிஎன் ஜா என்ன சொல்கிறார்.

கேள்வி: இந்த தீர்ப்பை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்: இந்த தீர்ப்பு இந்து மத நம்பிக்கைக்கு முதன்மை அளிக்கிறது. குறைபாடுடைய தொல்லியல் ஆய்வை நம்பி இவ்வாறு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது.

கேள்வி: நீங்கள் ஆய்வு செய்து உண்மை கண்டறிந்த “ராம் ஜென்மபூமி-பாப்ரி மஸ்ஜித்: தேசத்திற்கு வரலாற்று ஆய்வாளர்கள் அறிக்கை”யின் முடிவு எதுவாக இருந்தது?

பதில்: நாங்கள் எங்ளுக்கு கிடைத்த எல்லா சான்றுகளையும் கவனத்தில் கொண்டு, பாபர் மசூதி இடிக்கப்படும் முன்னர், 1992ம் ஆண்டு அரசிடம் இந்த அறிக்கையை சமர்பித்தோம். தீவிர ஆய்வுக்குப் பின்னர், இந்த மசூதிக்கு அடியில் ராமர் கோயில் இருக்கவில்லை என்று அதில் தெரிவித்திருந்தோம்.

கேள்வி: இந்திய தொல்லியல் துறை (ஏஏஸ்ஐ) எப்படி பங்காற்றி இருக்கலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

பதில்: அயோத்தி சர்ச்சையில் இந்திய தொல்லியல் துறை நிச்சயமில்லாத தகவல்களை அளித்து பங்காற்றியுள்ளது.

பாபர் மசூதி இடிக்கப்படும் முன்னர், அயோத்தியில் கிடைத்த தொல் பொருட்களை நாங்கள் பரிசோதனை செய்ய பழைய கோட்டைக்கு சென்றபோது, மிகவும் முக்கிய சான்றுகள் இருந்த அகழி 4-ன் தளக் குறிப்பு புத்தகத்தை தொல்லியல் துறை எங்களுக்கு காட்ட மறுத்தது.

சான்றுகளை மறைப்பதை இது தெளிவாக காட்டியது.

பாபர் மசூதியை இடித்த பின்னர், முன் தீர்மானத்தோடு இந்திய தொல்லியல் ஆய்வு துறை அகழ்வாய்வு நடத்தியது. கோயில் இருந்தது என்ற கருத்துக்கு முரணாக இருந்த சான்றுகளை அது மறைத்து விட்டது.

இந்திய தொல்லியல் துறை ஓரிடத்தை அகழ்வாய்வு செய்யும்போது அறிவியல்பூர்வ விதிகளை கடைபிடிக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது.

கேள்வி: இந்தியாவுக்கு அயோத்தி தீர்ப்பின் முக்கியத்துவம் என்ன?

பதில்: இந்த தீர்ப்பு பொரும்பான்மைவாதத்துக்கு தூபம் போடுகிறது. இது நமது நாட்டுக்கு நல்லதல்ல.

நன்றி- பிபிசி தமிழ்