மகிந்தாவுக்கு வாழ்த்து தெரிவித்த இந்திய பிரதமர்

சிறீலங்காவில் இம்பெற்ற பொதுத் தேர்தலில் அமோகமாக வெற்றி பெற்ற மகிந்த ராஜபக்சா தலைமையிலான அரசுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களை நேற்று (7) தெரிவித்துள்ளார்.

தொiபேசியில் மகிந்தாவை தொடர்புகொண்ட மோடி மேலும் தெரிவித்துள்ளதாவது:

கொரோனோ வைரஸ் நெருக்கடியிலும் தேர்தலை சிறீலங்கா அரசு சிறப்பாக நடத்தியுள்ளது. சிறீலங்கா மக்களும் பெருமளவில் பங்கொடுத்துள்ளனர். இது இரு நாடுகளிலும் ஜனநாயகம் சிறப்பாக செயற்படுவதை காட்டுகின்றது. இரு நாடுகளும் தமது உறவகளை பலப்படுத்தும்.

பௌத்த யாத்திரிகர்களின் நகரான குஷிநகர் பிரதேசத்தில் அனைத்துலக விமானநிலையம் ஒன்றை அமைப்பது தொடர்பிலும் இந்தியா செயலாற்றும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.