மகாராஷ்டிரா மாநிலத்தில் அரசு மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 குழந்தைகள் உயிரிழந்துள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவின் பண்டாரா மாவட்டத்திலுள்ள அரசு பொது மருத்துவமனையின் நோய்வாய்ப்பட்ட பிறந்த குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவில் இன்று அதிகாலை இரண்டு மணியளவில் இந்த தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதில், அங்கு சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த 17 குழந்தைகளில் ஏழு குழந்தைகள் மருத்துவமனை பணியாளர்களால் அப்புறப்படுத்தப்பட்ட நிலையில், மீதமுள்ள 10 குழந்தைகள் தீயில் சிக்குண்டு உயிரிழந்துள்ளதாக ஏ.என்.ஐ. முகமை செய்தி வெளியிட்டுள்ளது.