பௌத்தர்கள் பொறுமையாக இருக்கமாட்டார்கள் குருதி ஆறு ஓடும்; தமிழரை மிரட்டும் சிங்கள பௌத்தம்

முல்லைத்தீவு நீராவியடி பகுதியில் இடம்பெற்ற சம்பவங்களை அடிப்படையாக வைத்து, மல்வத்த பீட அனுநாயக்கர் திம்புல்கும்புரே சிறீ சரணங்கர விமலதம்மாபிதான தேரர் தமிழ் மக்களை கடுமையாக எச்சரிக்கை செய்யும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

01 2 பௌத்தர்கள் பொறுமையாக இருக்கமாட்டார்கள் குருதி ஆறு ஓடும்; தமிழரை மிரட்டும் சிங்கள பௌத்தம்
‘புத்தசாசனத்தில் பிக்குமார்கள் என்பவர்கள் மிகவும் கருணையாகவும், அன்பாகவும் பொறுமையாகவும் செயற்படுகின்ற பிரிவினர்களாவர். கருணையின் சாசனம் என்றே இதனை புத்தசாசனம் கூறுகிறது.

இப்படிப்பட்டவர்கள் தடிகளில், பொல்லுகளிலும், கத்திகளிலும் தாக்கக்கூடியவர்கள் அல்லர்.

w460 பௌத்தர்கள் பொறுமையாக இருக்கமாட்டார்கள் குருதி ஆறு ஓடும்; தமிழரை மிரட்டும் சிங்கள பௌத்தம்

இவர்கள் மிகவும் சமாதானமாக சட்டத்தை மதித்து செயற்படுபவர்களாகிய இவர்களில் யாராவது ஒருவர் மரணமடைந்தால் அவரது புகழுடல் தகனம் செய்யப்படும்.

யாழ்ப்பாணம் குருநகர் விகாரையில் இது இடம்பெற்றது. 2000 ஆண்டுகளுக்கு முன் இந்த விகாரை ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது அந்தப் பகுதியை சிலர் கபளீகரம் செய்து கோவில்களை அமைத்து புராதன இடமாக அந்த தலத்திற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்படுகின்றனர்.

அப்படி செய்து தான் சட்டத்தை எடுத்துக்கொண்டு வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

அப்படியொரு சட்டம் இருக்கிறதா என்பது எனக்குத் தெரியவில்லை. வடக்கில் சட்டத்தரணிகள் வீதியில் போராட்டம், சட்டத்தை மீறிய பிக்குகளை கைது செய்ய வலியுறுத்து, தமிழரின் நிலத்தில் சிங்களக் குடியிருப்பு, விகாரைகளுக்கு அனுமதியில்லை,

விகாரையானது கோவில் சம்பிரதாயங்களுக்கு பாதிப்பு என்று வடக்கிலுள்ள தமிழ் மக்கள் ஊடகங்களுக்கு தெரிவித்திருக்கின்றனர்.
இந்த நாடு, சிறீலங்கா, வடக்கு என்று புறம்பான நாடு இங்கு இல்லை. சட்டம் அனைவருக்கும் சமமானது.

அப்படியிருந்தால் தான் நாடு சட்டரீதியான சிறந்த ஆட்சியை செய்ய முடியும். இந்த சட்டத்தை மாற்றியமைத்து அவர்களுக்கு தேவையான வகையில் சட்டத்தை கையிலெடுத்து செயற்படுகின்றனர்.

திருகோணமலையில் பிக்கு சொரூபமொன்று சேதமாக்கப்பட்டு, கீழே தள்ளிவிடப்பட்டு அழிக்கப்பட்டிருப்பதை பத்திரிகையில் கண்டேன்.

இப்படி சம்பவங்கள் இடம்பெறுகையில் எமது ஆட்சியாளர்கள் பதிலளிக்காமல் மௌனம் காத்துவருகின்றனர்.

இதனை எமக்கு பொறுமையாக பார்த்துக் கொண்டிருக்க முடியாது. முன்னரும் இதுபோன்ற சம்பவங்கள் அண்மையில் இடம்பெற்றன. ஆட்சியாளர்கள் தொடர்ந்தும் இவ்வாறு மௌனம் காத்து வந்தால் சட்டத்தை மக்களே கையிலெடுப்பார்கள்.

இதுதான் நடக்கும். ஆகவே ஆளுங்கட்சி, முப்படையினர், பொலிஸார் என்ற வகையில் சரியான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். பௌத்த தேரர்களுக்கு தாக்குதல், இடையூறுகளை ஏற்படுத்தும் போது திருப்பியடிக்க மாட்டார்கள்.

ஆனாலும் அமைதிகாக்கும் பௌத்த மக்கள் பொறுமையாக இருக்கமாட்டார்கள். அதனால் இது மிகப்பெரிய அழிவாகவும் கலவரமாகவும் ஆகிவிடும். இந்த நிலைமையை கருத்திற்கொண்டு ஆட்சியாளர்கள் செயற்பட வேண்டும்.

நான் ஒட்டுமொத்த பிக்குமார்களுக்காகவும் பேசுகின்றேன். மீண்டும் ஒருமுறை இந்த நாட்டை இரத்த ஆறாக மாற்றிவிட வேண்டாம்.கட்டியிருக்கும் நாய்களை அவிழ்த்துவிட்டு ஐயோ கடிக்கிறதே என்று அலறுவதில் அர்த்தமில்லை.

ஆகவே புத்திமிக்க யாழ்ப்பாணம் மற்றும் வடக்கு மக்கள் சிந்தித்துப் பாருங்கள். அகிம்சையாக மக்களை குழப்பிவிட்டு மனங்களில் கோபத்தை ஏற்படுத்தி இந்த நாட்டை இரத்தம் சிந்துகின்ற நாடாக மாற்றவா முயற்சிக்கின்றீர்கள்? ஆட்சியாளர்கள் அச்சமின்றி சட்டத்தை அமுல்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் இந்த நாட்டு மக்கள் மறுமடியும் சட்டத்தைக் கையிலெடுத்து விடுவார்கள் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.