போலி விசாக்களைப் பயன்படுத்தி ஜேர்மனி செல்ல முயன்ற மூவர் கைது – சி.ஐ.டி. விசாரணை

போலி விசாக்களைப் பயன்படுத்தி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வழியாக ஜேர்மனிக்கு தப்பிச்செல்ல முயன்ற குற்றச்சாட்டில் கட்டுநாயக்கா விமான நிலையத்தின் குடிவரவு மற்றும் குடியகல்வுதிணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பைச் சேர்ந்த 34 வயது தாயொருவரும், அவரது 9 வயது மகனும், வவுனியா பகுதியைச் சேர்ந்த 34 வயது நபருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஈ.கே.-651 என்ற எமிரேட்ஸ் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான விமானத்தின் மூலம் டுபாய் நோக்கிப் புறப்படமுற்படுகையிலேயே இவர்கள் நேற்றுக் காலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதான மூவரும் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்கா விமான நிலையத்தில் உள்ள குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.