பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி

மொரகஹஹேன, மிரிஸ்வத்த பிரதேசத்தில் இன்று காலை பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இன்று அதிகாலை 02.00 மணியளவில் மொரகஹஹேன டயர் தொழிற்சாலைக்கு அருகில் உத்தரவை மீறிச் சென்ற முச்சக்கர வண்டி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

மேலும், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட போது முச்சக்கரவண்டிக்குள் இருந்த மற்றுமொரு நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.