பொருளாதார பாதிப்பால் நாட்டில் இறப்பு வீதம் உயர்வு – ஐக்கிய மக்கள் சக்தி

ashoka abeysinghe பொருளாதார பாதிப்பால் நாட்டில் இறப்பு வீதம் உயர்வு - ஐக்கிய மக்கள் சக்திபொருளாதார பாதிப்பால் நாட்டில் இறப்பு வீதம் உயர்வடைந்து, பிறப்பு வீதம் குறைவடைந்துள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க தெரிவித்தார்.

பொருளாதார பாதிப்பில் இருந்து மீண்டு விட்டோம் என அரசாங்கம் குறிப்பிடுகிறது. ஆனால், சமூக கட்டமைப்பில் மக்கள் வாழும் போராட்டத்தை எதிர்கொண்டுள்ளார்கள் – என்று நேற்று பாராளுமன்றில் உரையாற்றிய போது அவர் கூறினார்.

2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2023ஆம் ஆண்டு மொத்த சனத்தொகை வளர்ச்சி 1 இலட்சத்து 44 ஆயிரத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. பிறப்பு வீதமும், குறைவடைந்துள்ளது. பொருளாதார பாதிப்பால் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்தவர்களில் 7,120 பேர் உயிரிழந்துள்ளார்கள் என்றார்.