பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுவிப்பதில் தமிழக அரசு உறுதியாகவுள்ளது.

பேரறிவாளன் உட்பட 7பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசு உறுதியாகவுள்ளது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் மிகப் பெரும் முஸ்லிம் தலைவரான காயிதே மில்லத்தின் 124ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியதன் பின்னர் அவர் இதனை தெரிவித்தார்.

ஆளுநரே அரசியலமைப்பின் தலைவர் என்றும் அவரே எந்தவொரு உத்தரவையும் பிறப்பிப்பதற்கு அதிகாரமுடையவர் எனவும், அவர்தான் இந்த 7பேர்  விடுதலை குறித்த முடிவை எடுக்க முடியும் என்றும் ஜெயக்குமார் மேலும் தெரிவித்தார்.

இதனாலேயே 7பேரையும் விடுதலை செய்வதற்கான கோரிக்கைக் கடிதமொன்றை ஆளுநருக்கு அனுப்பியுள்ளதாகவும்  அவர் கூறினார்.