பூட்டினின் பேச்சாளருக்கும் கொரோனா

ரஸ்யா அரச தலைவர் விளமிடீர் பூட்டினின் பேச்சாளர் டிமிறி பெஸ்கோவ் கோவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டு இன்று (12) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பூட்டினின் அரசில் உள்ளவர்களில் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்ட ஐந்தாவது முக்கிய அதிகாரி இவராவார்.

அமெரிக்காவுக்கு அடுத்த நிலையில் ரஸ்யாவில் கோவிட்-19 நோய் வேகமாக அதிகரித்து வருகின்றது. இதுவரை அங்கு 2,116 பேர் பலியாகியுள்ளதுடன், 232,243 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.