அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் நினைவேந்தல் நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பு பகுதியில், படுகொலைசெய்யப்பட்ட 18 பொதுமக்களின் நினைவேந்தல் நிகழ்வு பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் இன்று மாலை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரனால் நடாத்தப்பட்டது.

IMG 2690 1 அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் நினைவேந்தல் நிகழ்வு

1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் முஸ்லிம் ஊர்காவல் படையினரும் இராணுவத்தினரும் இணைந்து நடாத்திய தாக்குதலில் 18பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

IMG 2673 அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் நினைவேந்தல் நிகழ்வு

இவ்வாறு படுகொலைசெய்யப்பட்டவர்கள் வருடாந்தம் நினைவுகூரப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு அந்த நினைவுகூரலுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு அனுஸ்டிப்புக்கான எந்த ஏற்பாடுகளும் செய்யப்படாத நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனால் அனுஸ்டிக்கப்பட்டது.

IMG 2666 அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் நினைவேந்தல் நிகழ்வு

புதுக்குடியிருப்பில் உள்ள படுகொலைசெய்யப்பட்ட ஞாபகார்த்த தூபியருகே இந்த நிகழ்வு அனுஸ்டிக்கப்பட்டது. இதன்போது சுடரேற்றி உயிர்நீர்த்தவர்களுக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஞ்சலி செலுத்தினார்.

IMG 2642 அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் நினைவேந்தல் நிகழ்வு

IMG 2642 அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் நினைவேந்தல் நிகழ்வுவழமையாக இந்த நிகழ்வினை ஏற்பாடுசெய்யும் ஏற்பாட்டுக்குழுவினருக்கு பொலிஸ் மூலமாக விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள் காரணமாக இந்த நிகழ்வினை அவர்களால் நடாத்தமுடியவில்லையென மக்கள் தெரிவித்தனர்.

IMG 2698 அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் நினைவேந்தல் நிகழ்வு

உயிரிழந்த அப்பாவி பொதுமக்களை நினைவுகூருவதற்கு யாரும் தடைவிதிக்கமுடியாது என இதன்போது கருத்து தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் தெரிவித்தார்.